பரமத்தி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 August 2022

பரமத்தி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் கடந்த 1990- 1992 ம் ஆண்டுகளில் 12.  வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களை தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் 100க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர் சிலர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து இந்த சந்திப்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் தங்களது கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னாள் மாணவ மாணவிகள் அழைத்து கவுரவித்து ஆசைப்பட்டனர் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தங்களை குடும்பத்துடன் அறிமுகம் செய்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நினைவு கூறினார்.


நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக 88 வயது தலைமை ஆசிரியர் அர்ஜுனனை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து ஆசி பெற்றனர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டன மேலும் பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது எனவும் முன்னாள் மாணவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர் ஏற்பாடுகளை முன்னால் மாணவர்கள் ஆனந்தராஜா பாண்டியன் பரமசிவம் தொழில் அதிபர் சேகர் பிரேம்குமார் மற்றும் துரைசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad