நாமக்கல்லில் தபால் ஊழியர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர் 75வது சுதந்திர தினத்தின் அமுதா பெருவிழா முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுவித்துள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று இந்தியா அஞ்சல் துறையின் சார்பாக நாமக்கல்லில் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தை நாமக்கல் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மோகனூர். சாலை பரமத்தி சாலை வழியாக சந்தப்பேட்டை .புதூர். உழவர் சந்தை. மணிக்கூண்டு. மீண்டும் தலைமை அஞ்சலத்தில் முடிவடைந்தது.
அஞ்சல் துறை ஊழியர்கள் தேசியக்கொடியை கையில் கையில் ஏந்தியவாறு கலந்து கலந்து கொண்டு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்த ஊர்வலத்தில் தலைமை எடுத்து உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் அண்ணாமலை மேற்கு மாவட்ட அஞ்சல் ஆய்வாளர் பொறுப்பு கோபிநாத் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் வணிக வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் சங்கர் மற்றும் தலைமை அஞ்சலக ஊழியர்கள் தபால்காரர்கள் கிளை அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment