ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் பிரதேச அமைப்பு குழுவின் அமைப்பாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார், ஆர்ப்பாட்டத்தில் அரிசி, பருப்பு, மாவு, வெல்லம், தயிர் மற்றும் கோதுமை உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஒருவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்கை குழு உறுப்பினர் ஜெயமணி மாவட்ட குழு உறுப்பினர் சிவராஜ் கிளைச் செயலாளர் கருணாநிதி, மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்ந்து மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்பை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் வரிவிதிப்பை கைவிட வலியுறுத்தி அரிசி மூட்டைகளை தலையில் சுமந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் பள்ளிபாளையம் பஸ் நிலையம் நால்ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது பள்ளிபாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமை தாங்கினார், குமாரபாளையம் சாலையில் அக்ரஹாரம் பகுதியில் செயல்படும் பைனான்ஸ் ஒன்றில் மர்மமான முறையில் இருந்து விசைத்தொழிலாளி செந்தில்குமார் மரணம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் தமிழக அரசு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ரவி செயற்கை குழு உறுப்பினர்கள் பெருமாள் அசோகன் வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் லட்சுமணன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment