நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று காலை புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது நாமக்கல் ஆவின் பொது மேலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார் மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி கருப்பண்ணன் முன்னிலை வைத்தார்.
விழாவில் நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ஆர். ஆர். ராஜேந்திரன் கலந்துகொண்டு புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார், இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் உடையவர், மோகனூர் ஒன்றிய செயலாளர் ஆத்மா, சேர்மன் நவலடி, பேரூர் செயலாளர் செல்லவேல், பேரூராட்சி தலைவர் வனிதா மோகன் குமார், துணைத் தலைவர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சுகுமார், இலக்கிய அணி புறவாளர் அர்ஜுனன் உள்பட பேரூராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
- தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment