நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் பட்டினம் முனியப்பன் பாளையம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் சில தினங்களாக சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வந்தது இந்த நிலையில் இந்திரா காலனி பகுதியில் காங்கிரீட் தளம் அமைக்கும் போது சாலையில் ஏற்கனவே சில ஆண்டுகளாக பயன்படாத நிலையில் இருந்து வந்த அடிப்பம்பு அகற்றப்படாமல் கான்கிரீட் போடப்பட்டது.
இதைக் குறித்து அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரர் இடம் கேட்டுள்ளனர் அதற்கு அவர் சரியான பதில் அளிக்காததால் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர் அதன்பேரில் ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி வனிதா. பொறியாளர் நைனாமலை ராஜ் ஆகியோர் இந்திரா காந்திக்கு சென்று அடி பம்பை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பிறகு காங்கிரிட் அமைக்கப்பட்ட இடத்திலிருந்து அடி பம்பை அகற்றி விட்டனர் கான்கிரீட் அமைக்கும் பணியை பட்டினம் மதியழகன் என்பவர் எடுத்து செய்து வந்தார் இந்த புகாரின் அடிப்படையில் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment