நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பெண்கள் தர்ணா போராட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 August 2022

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பெண்கள் தர்ணா போராட்டம்.

நாமக்கல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணர போராட்டத்தில் ஈடுபட்டனர், நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டி காதம்பள்ளி கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆண்டுகளாக வசித்து வரும் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா இல்லை இது தொடர்பாக அவர்கள் தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பின் சார்பில் தாங்கள் குடியிருக்கும் நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.


இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதனால் அது திருப்தி அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று அந்த அமைப்பின் மாநில தலைவர் ஈஸ்வரி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு த ர்ணர போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் த ர்ணர போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர் இதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலந்து சென்றனர் இந்த சம்பவம் நேற்று சிறிது நேரம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்படுத்தியது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad