காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் காவிரியில் 2 லட்சத்து பத்தாயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனை அடுத்து குமராபாளையம் பள்ளிபாளையம் சுற்றியுள்ள காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பொதுமக்களை பத்திரமாக மீட்டு புதன் சந்தை பகுதியில் தனியார் திருமண மண்டப முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு பள்ளிபாளையம் திமுக நகர மன்ற தலைவர் செல்வராஜ் தனது சொந்த செலவில் உணவு வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது அவர்களுக்கு கொண்டுவரப்பட்ட உணவு நகராட்சியின் பொது வாகனத்தில் கொண்டு வராமல் உணவை அவமதிக்கும் வகையிலும் பொதுமக்களை அலட்சியமாக பார்க்கும் வகையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை சேகரிக்கு செல்லும் வாகனத்தில் கொண்டுவரப்பட்டதால் முகாமில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment