6 பேரை மணந்து நகை பணம் மோசடி...7 வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது மேலும் மூணு பேர் சிக்கினார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 September 2022

6 பேரை மணந்து நகை பணம் மோசடி...7 வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது மேலும் மூணு பேர் சிக்கினார்.


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையம் வடக்கு தெரிவை சேர்ந்தவர் கந்தசாமி இவருடைய மகன் தனபால் வயசு 37 நிதி நிறுவனம் நடத்தி வருகிறார், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தியா வயசு 27.  இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த ஏழாம் தேதி பரமத்தி வேலூர் அண்ணா நகர் அருகே உள்ள புது வெங்கரை அம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.


இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் மணமகளின் அக்காள் மற்றும் மாமா என இரண்டு பேர் மட்டுமே வந்திருந்ததாக கூறப்படுகிறது, திருமணத்திற்கு ஏற்பாடு செய்த திண்டுக்கல் மாவட்டம் தாதான் குளத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன்(45) என்பவர் திருமணம் முடிந்து பின்னர் அதற்கான கமிஷன் தொகையாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து பெற்றுக் கொண்டு மணமகளின் அக்கா மற்றும் மாமா என்று கூறி வந்த இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.


இந்த நிலையில் புது மாப்பிள்ளை தனபால் பல கனவுகளுடன் தனது வாழ்க்கையை தொடங்கினார், ஆனால் இரண்டு நாட்களில் தனபாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது மூன்றாவது நாளில் தனபால் காலையில் எழுந்து பார்த்தபோது தனது ஆசை மனைவி சந்தியாவை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார், பின்னர் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதை அடுத்து தனபால் உடனே மனைவி சந்தியா புரோக்கர் பாலமுருகன் மற்றும் உறவினர்களாக வந்த இரண்டு பேருக்கு போன் செய்த போது அனைவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 


இதனால் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது திருமனப்பட்டு சேலை மற்றும் சந்தியா கொண்டு வந்த துணிமணிகள் இல்லாததை கண்டு தனபால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் இதைக் குறித்து தனபால் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார், அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


இது ஒரு புறம் இருக்க அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடிய போது வேற ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்ததை அறிந்த தனபால் அந்த நபர் மூலம் சந்தியா புரோக்கர் மற்றும் உடன் வந்தவர்களை பிடிக்க எண்ணினார் அதன்படி அந்த நபர் திருமணம் செய்து கொள்ள தனது விருப்பத்தை மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமி இடம் வயசு 45 கூறினார் பின்னர் மணமகனின் போட்டோவையும் கொடுத்தனர் அதில் மணமகளுக்கு மாப்பிள்ளை பிடித்துள்ளது என தனலட்சுமி செல்போனில் கூறியதை அடுத்து திருமணத்தை முடிவு செய்தனர்.


இதை அடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்து மணப்பெண் சந்தியா மற்றும் தனலட்சுமி உறவினர் என கூறப்பட்ட நாலு பேர் உட்பட ஐந்து பேர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்தனர், அப்போது அங்கு நின்ற தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து சந்தியா அவருடன் வந்தவர்களை மடக்கி பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர், தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக்கின.


அதாவது மதுரை திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் சந்தியாவுக்கு இதுவரை ஆறு திருமணங்களையும் நடத்தி வைத்து நகை பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.


தற்போது சந்தியாவுக்கு திருச்செங்கோட்டில் நடைபெற இருந்தது 7-வது திருமணம் ஆகும் இதை அடுத்து சந்தியா புரோக்கர் தனலட்சுமி மதுரை மாவட்டம் வில்லாபுரம் அம்மாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மெக்கானிக். கௌதம் 26 .மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேல் நாச்சியபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார் டிரைவர் ஜெயவேல் வயசு 30 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர் காரம் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் தலைமறைவான புரோக்கர் பாலமுருகன் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டர் மலை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் ஐயப்பன் வயசு 28 .ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


கைதான கல்யாண ராணி சந்தியா ஒவ்வொரு திருமணத்தின் போதும் மணமகன் வீட்டில் இருந்து நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மாயமாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் மேலும் இந்த மோசடியில் ஒரு கும்பலை ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது தொடர் விசாரணை சினிமா போல நடந்த இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சந்தியா மற்றும் புரோக்கர்கள் எத்தனை இடங்களில் இது போல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த சம்பவம் பரமத்தி வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


- தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad