மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை வட்டார சுகாதாரத்துறை மூலம் வட்டார சுகாதார பேரவை என்ற கலந்தாய்வு கூட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 September 2022

மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை வட்டார சுகாதாரத்துறை மூலம் வட்டார சுகாதார பேரவை என்ற கலந்தாய்வு கூட்டம்.


பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை வட்டார சுகாதாரத்துறை மூலம் வட்டார சுகாதார பேரவை என்ற கலந்தாய்வு கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திரு செல்வராஜ் அவர்கள் பள்ளிபாளையம் நகர மன்ற துணைத் தலைவர் திரு பாலமுருகன், பள்ளிபாளையம் வட்டார அளவில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் சித்த மருத்துவத் துறை மற்றும் காசநோய் தடுப்பு பிரிவு தொழுநோய் தடுப்பு பிரிவு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.


அங்கன்வாடி மையத்தின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துக்களின் வகைகள் மற்றும் தானியங்களால் ஆன உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவத்துறை மூலம் மக்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மாத்திரைகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் ஊக்குத்தகையில் பற்றி விளக்க கையேடுகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் திவ்யா மருத்துவர் செந்தாமரை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் பாலு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad