பிரதமரின் முயற்சியால் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது நாமக்கல்லில் மத்திய இணை மந்திரி எல். முருகன் பேச்சு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 September 2022

பிரதமரின் முயற்சியால் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது நாமக்கல்லில் மத்திய இணை மந்திரி எல். முருகன் பேச்சு.

பிரதமரின் முயற்சியால் இந்தியா வேகமாகவும் துடிப்புடனும் முன்னேறி வருவதாக நாமக்கல்லில் அமிர்தா பெருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.


இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் மூலம் இந்தியா சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமிர்த பெரு விழா நாமக்கலில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது அதை ஒட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி மத்திய இணை மந்திரி எல் முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்று இருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப்படங்கள் பல்வேறு அரசு துறைகளில் சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்க படங்களை அவர் பார்வையிட்டார் முன்னதாக கண்காட்சி அரங்கின் நுழைவாயிலில் வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் சிலைக்கு இணை இணை மந்திரி முருகன் மாலை அணிவித்து மழைத்துவியும் மரியாதை செலுத்தினார்


அதன் பிறகு இந்தியா சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமிர்த பெருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு ஏ கே பி சின்ராஜ் எம்பி தலைமை தாங்கினார் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா முன்னிலை வகித்தார் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வரவேற்று பேசினார் அதில் மத்திய இணை மந்திரி எல் முருகன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்


பின்னர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் என்ற நூலை எல். முருகன் வெளியிட்டார். மேலும் அமிர்தா பெருவிழா ஓவிய போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு மத்திய இணை மந்திரி முருகன் பரிசுகளை வழங்கினார் அதேபோல் தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகளும் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி முருகன் பேசியதாவது


வருகிற 2047 ஆம் ஆண்டு இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது அப்போது உலக நாடுகளுக்கு முன்னோடி நாடாக இந்தியா திகழ வேண்டும் அதற்காக வரும் 25 ஆம் ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு இந்தியனும் உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுவித்து இருந்தார் கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது? கடந்த எட்டு ஆண்டில் நாடு எவ்வளவு முன்னேறி உள்ளது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் ஆறாண்டில் நமது நாடு தூய்மை இந்தியாவாகி உள்ளது. மேலும் 200 கோடிக்கு மேலான கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசால் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல் பிரதமர் மோடி தற்சார்பு இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பிரதமரின் முயற்சியால் இந்தியா நாடு வேகமாகவும் துடிப்புடன் முன்னேறி வருகிறது. நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் சென்னை மத்திய மக்கள் தொடர்பாக இயக்குனர் காமராஜ் பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி துணைத்தலைவர் முத்துக்குமார் பொதுச்செயலாளர்கள் வடிவேல் சத்திய பானு தேசிய பொது குழு உறுப்பினர் மனோகரன் நகரத் தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad