பள்ளிபாளையம் நேரு நகர் நகரை சேர்ந்தவர் சேகர் இவர் பழைய இரும்புத் தொழில் செய்து வருகிறார் பழைய மது பாட்டில்கள் லாரி உதிரி பாகங்கள் கார் வீட்டு உதிரி உபயோகப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பிரிக்கும் பணியில் குடோனில் ஆறு பேர் வேலை பார்த்து வந்தனர்.
இன்று மதியம் இவரது குடோனில் இருந்து தீ பற்றியது தீ மலம் மழைவென குடோன் முழுவதும் பற்றியது இதை பார்த்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர் இதை பார்த்த பொதுமக்கள் வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர்.
விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துள்ள ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள இரு சக்கர உரிய பாகங்கள் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியாக இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment