நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்வதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகிச் சென்றனர் இதை குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது நேரில் வந்த தீயணைப்பு படையினர் டீச்சர்ஸ் காலனி சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பொதுமக்கள் கூறினர் அப்பகுதியில் இரவிலும் தேடி வருகின்றனர் இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் சமீபத்தில் காவிரியில் வெள்ளம் வந்தபோது பள்ளிபாளையத்தில் முதலை வந்தது போல இந்த எருமை அடித்து வரப்பட்டது எனவும் பேசி வருகின்றனர்.
காட்டெருமை சமய சங்கிலி அருகே உள்ளதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் வந்தது அடுத்து. காட்டெருமை கண்ட தீயணைப்பு படையினர் துப்பாக்கி மூலம் மைக் ஊசி செலுத்தினர். ஆனால் காட்டெருமை மயங்கி விழவில்லை. தப்பி சென்று விட்டது தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment