நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அகற்றப்பட்ட நிழற் கூடத்தை மேம்பாலம் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அமைக்க வேண்டும் என அதிமுகவினர் வேண்டுகோள் விடுவித்துள்ளனர் பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 66 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை விரிவுபடுத்தி நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இருக்கை மின் வசதி பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட வசதிகளுடன் இரண்டு பெரிய அளவு நிழற்குடன் அமைக்கப்பட்டது.
தற்போது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேம்பாலம் பணி நடைபெற நிழற்குடன் அகற்றப்பட்டு விட்டது பனி முடிந்தவுடன் மீண்டும் நிழல் கூடத்தை அமைக்க வேண்டும் என நேற்று அதிமுக கவுன்சிலர்கள் நிர்வாகிகள் முன்னாள் சேர்மன் அதிமுக நகரச் செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில் நகராட்சி கமிஷனர் கோபிநாத் இடம் மனு கொடுத்தனர் இதைக் குறித்து முன்னாள் சேர்மன் வெள்ளிங்கிரி கூறியதாவது.
நவீன முறையில் அமைக்கப்பட்ட நிழல் கூடம் பயணிகளை மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது தற்போது மேம்பாலம் பணிக்காக அகற்றப்பட்டு விட்டது அகற்றப்பட்ட நிழற்குடம் இதரப் பொருட்களை பாதுகாப்பாக வைத்து பணி முடிந்தவுடன் மீண்டும் அமைக்க வேண்டும் எங்களது கோரிக்கையை நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி தர வேண்டும் என கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம் இவ்வாறு கூறினார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment