பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மீனவர் மலையில் முதலைக்குட்டி சிக்கியது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 September 2022

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மீனவர் மலையில் முதலைக்குட்டி சிக்கியது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது இதனால் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த நிலையில் நேற்று பள்ளி வாளையத்தை அடுத்த பாளையத்தில் மீனவர்கள் சிலர் மீன்களை பிடிக்க காவேரி ஆற்றில் வலை விரித்து வைத்திருந்தனர்.


மாலை அந்த வலையை எடுத்த மீன்களை சேகரித்துக் கொண்டிருந்தனர் அப்போது வலையில் ஏதோ ஒன்று நெளிந்து கொண்டிருந்தது இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் திருச்செங்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், இதை அடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று முதலைக்குட்டியை மீட்டனர். 


இதைக் குறித்து அவர்கள் கூறுகையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முதலைக்குட்டி தண்ணீரில் அடுத்து வரப்பட்டு இருக்கலாம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர், பின்னர் அதனை வனத்துறையினர் திருச்செங்கோடு கொண்டு சென்றனர் காவிரி ஆற்றில் முதலைக்குட்டி சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad