நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 10 ஆண்டுகளாக இருந்த சாலை பிரச்சினையை மக்கள் கோரிக்கையை ஏற்று உடனடி சாலை அமைக்க நகர்மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆவரங்காடு மீனவர் தெரு காவிரி கரையில் பல ஆண்டுகளாக இணைக்கப்படாமல் இருந்த சாலை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர் அதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையின் அடிப்படையில் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்காலிக சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் தார் சாலையை அமைத்து தரப்படும் என்று சேர்மன் மற்றும் 19வது வார்டு கவுன்சிலர் மங்கல சுந்தரம் ஆகியோர் உறுதி கூறினர்
தமிழக குரல் செய்திகளுக்கு நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment