நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக பெய்த மழையால் கொங்கு பள்ளத்தில் பெருக்கெடுத்து வெள்ளத்தால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் உடைந்து வளாகத்தில் மழை நீர் புகுந்து குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது. போல் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள விவசாய நிலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த விவசாய நிலத்தின் நடுவே தரைமட்ட பாலம் உள்ளது இந்தப் பாலத்தின் மீதுதான் பள்ளி மாணவர் மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வந்தாக வேண்டும் இப்போது தண்ணீர் அதிகம் உள்ளதால் இனி மழை பெய்தால் தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும் இதனால் மாணவ மாணவியர்கள் பள்ளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுபவர்கள். உடனடியாக நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment