குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை; கலெக்டர் உமா எச்சரிக்கை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 17 June 2023

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை; கலெக்டர் உமா எச்சரிக்கை.


நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார் நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலச் சட்டம் கடைபிடித்தல் குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.


இதில் கலெக்டர் உமா பேசியதாவது நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலையில் அதிகம் உள்ளதால் நல்ல முறையில் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் இதர மாநிலங்களில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் குழந்தை தொழிலாளர் இல்லாத தொழிற்சாலைகளாக இருக்க வேண்டும் மேலும் திருத்தி அமைக்கப்பட்ட அரசின் வழிகாட்டுதல் படி அதிக அளவில் தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் தொழிலாளிகளாக ரத்த அழுத்தம் நீரிழிவு போன்ற நோய்களின் தாக்கம் குறித்து கண்காணித்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் அவ்வாறு வசதி செய்ய முடியாத இனங்களில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் உங்க ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.


தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறையின் மூலமாக புலம்பெயர் தொழிலாளர் தொடர்பாக பதிவுசான்று தொழிற்சாலைகள் காணும் முறையான உரிமம் ஆகியவற்றினை தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பெற்றிருக்க வேண்டும் புலம்பெயர் தொழிலாளர்களின் அடையாளங்கள் முறைப்படுத்த வேண்டும் தொழிற்சாலைகள் ஐந்து பேருக்கு மேல் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தால் உரிமம் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டும் மேலும் தொழிற்சாலைகள் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாதவையாக இருக்க வேண்டும் இதில் ஏதேனும் விதிமுறை மீறல் இருப்பின் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad